tamilnadu

img

வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் மரணம்

ஆந்திராவில் வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
வெங்காயம் விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. வெளி மார்க்கெட்டில் வெங்காயம் விலை சுமார் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உழவர் சந்தைகளில் வெங்காயம் மானிய விலையில் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் 3.கி.மீ நீண்டவரிசையில் நின்று வெங்காயம் வாங்கி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா குலுவாடாவில் உள்ள உழவர் சந்தையில் ஞாயிறன்னு மானிய விலையில் வெங்காயம் விற்பனை நடைபெற்றது. அப்போது வெங்காயம் வாங்க வந்தவர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது நீண்ட நேரம் நின்றிருந்த சாம்பய்யா என்பவர்க்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.